தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்.... டிச.4 முதல் மீனவர்கள் 'ஸ்டிரைக்'
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் அமைப்பு வரும் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம், மீனவர் சங்கத் தலைவர் சந்தியாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர்கள் அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும், அவர்களுக்குச் சொந்தமான 53 விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி, மீன்பிடி சாதனங்களை கடலில் வீசசி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் இலங்கைக் கடற்படையினரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின்படி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு கடலில் மூழ்கும் நிலையில் உள்ள 18 படகுகளை உடனடியாக மீட்க வேண்டும். மேலும் தீ விபத்தில் சேதமான ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை- இந்திய மீனவர்களின் 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும். மேலும், அனைத்து மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications