தமிழகமே எதிர்பார்க்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல்?
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு ஜூன் 5-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதால் அவருக்காக 2015-ம் ஆண்டு ஆர்கே நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலை சந்திக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3 தேர்தல்களை எதிர்கொள்கிறது ஆர்.கே.நகர் தொகுதி.
இத்தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்திருந்தார்.
இதற்கு ஆர்கே நகர் தொகுதி அதிமுகவினர் முன்னர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அதிமுக தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியை ஆதரித்து வருகின்றனர்.
இதனால் தீபாவுக்கு அதிமுகவினர் ஆதரவு இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆர்.கே.நகர் தொகுதியை எப்படியும் கைப்பற்றுவது என திமுக வியூகம் வகுத்து வருகிறது. தமிழக அரசியல் களத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications