தமிழகமே எதிர்பார்க்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல்?
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு ஜூன் 5-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதால் அவருக்காக 2015-ம் ஆண்டு ஆர்கே நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலை சந்திக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3 தேர்தல்களை எதிர்கொள்கிறது ஆர்.கே.நகர் தொகுதி.
இத்தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்திருந்தார்.
இதற்கு ஆர்கே நகர் தொகுதி அதிமுகவினர் முன்னர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அதிமுக தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியை ஆதரித்து வருகின்றனர்.
இதனால் தீபாவுக்கு அதிமுகவினர் ஆதரவு இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆர்.கே.நகர் தொகுதியை எப்படியும் கைப்பற்றுவது என திமுக வியூகம் வகுத்து வருகிறது. தமிழக அரசியல் களத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications