கோவை மாநகர போக்குவரத்தின் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-ஏராளமானோர் பங்கேற்பு
சாலைபாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை: சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
29-வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இம்மாதம் 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் இரு சக்கர வாகன பணிமனை தொழிற்சங்கம், ஸ்ரீ ரமண மகரிஷி ட்ரஸ்ட் சார்பாக, சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

வடகோவையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் இந்த பேரணி துவங்கியது. இதனை கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல்துறையினர், தன்னார்வலர்கள் என நூற்றூக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வட கோவை சாலையில் துவங்கிய இந்த பேரணி ராலி ரோடு உழவர் சந்தையில் முடிவடைந்தது.
பேரணியில், சாலை விதிகளை மதிப்போம், தலை கவசம் அணிய வேண்டும், குடி போதையில் வாகனத்தை இயக்க கூடாது, உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications