சென்னை நகைக் கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு! கொள்ளை முயற்சியா? பணத் தகராறா?
சென்னை: சென்னை மேடவாகத்தில் நகைக் கடை உரிமையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையடிக்க முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடந்ததா? அல்லது பணத் தகராறில் மோதல் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேடவாக்கத்தில் சாய்ராம் அடகு மற்றும் நகைக் கடையை நடத்தி வருபவர் சுனில். இதே கடையுடன் சுனிலும் வீடு உள்ளது.

சுனில் கடையில் நேற்று இரவு அமர்ந்திருந்த போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் சுனிலின் தோள்பட்டையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்.
ரத்தம் சொட்ட சொட்ட ஆயுததாரியைப் பிடிக்க சுனில் முயற்சித்தார். ஆனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
முன்னதாக சுனிலின் நகைக் கடையில் கொள்ளையடித்ததைத் தடுக்க முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்பட்டது. அதேபோல் பணத் தகராறில்தா சுனில் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications