மதிமுக நிர்வாகியின் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு: தி.க. குற்றச்சாட்டு
சென்னை: மதிமுக நிர்வாகி ஒருவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடத்துவதாக திராவிடர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து திராவிடர் கழகம் தரப்பில் கூறப்படுவதாவது,
மதிப்புற்குரிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களே, நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பே உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஐய்க்கியமாகி, ஆர்.எஸ்.எஸ் இளைஞர் கோடை முகாம் நடத்தி கொண்டுள்ளனர்.
உடுமலை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கெடிமேடு என்ற இடத்தில் "சீலக்காம்பட்டி தம்பு என்பவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உதவியுடன்" விஸ்வ நேத்ரா என்ற பெரிய பள்ளியை நடத்தி வருகிறார்.
சீலக்காம்பட்டி தம்பு - மதிமுகவின் முக்கிய தலைவர் - சீலக்கம்பட்டி பஞ்சாயத்தின் தலைவராக உள்ளார். கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இளைஞர்களுக்கு பயிற்சி நடத்தி கொண்டு இருக்கிறார். இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இனி இதற்கு மதிமுக சார்பிலோ அல்லது அதன் பொதுச் செயலாளரோ பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications