Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்பட்டிருக்காதாம்.. சொல்வது எஸ்.வி.சேகர்!!!!!

சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார் என்று காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரத பிரதமரால் ராஜகுரு என அழைக்கப்பட்ட துக்ளக் சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்பட விட்டிருக்கமாட்டார் என்று காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சோ ராமசாமி, தமிழக அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலான அரசியலை அலசி ஆராய்ந்தவர். அவர் துக்ளக் பத்திரிகையில் எழுதும் கட்டுரைகளுக்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் பிரதிபலித்ததையும் யாராலும் மறுக்க முடியாது.

 S.Ve.Shekher says about Cho Ramasamy

ஜெயலலிதாவின் நண்பரும், நம்பிக்கைக்குரியவராக இருந்த சோ, ஜெயலலிதா இறந்த அடுத்த நாளே யாரும் எதிர்பாராத வகையில் மரணத்தைச் சந்தித்தார். இவர் இறந்தும் ஒரு வருடம் முடியப் போவதால் எஸ்.வி.சேகர் இவரைப் பற்றி ஒன்றைக் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாக எஸ்.வி.சேகர் கந்து வட்டி, அதிமுக பிரச்சினை, இரட்டை இலை விவகாரம் என பல்வேறு விஷயங்களில் தனது அரசியல் கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் "சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்பட்டிருக்காது" என்று ஒரு தினுசான கருத்தைக் கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.

அவர் போட்டுள்ள டிவீட்டில், நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களை சென்னையில் மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்திய என் மானசீக குரு சோ. நம் பிரதமர் மோடி அவர்கள் மனதார ராஜகுரு என அழைக்கப்பட்டவர் துக்ளக் சோ மட்டுமே. அவர் இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார். I MISS U CHO sir என்று குறிப்பிட்டுள்ளார்.

அதெப்படி அசிங்கப்படாமல் சோ காப்பாத்தியிருப்பார்???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+