தேடி வந்த விருதை வாங்க மறுத்த சகாயம் ஐஏஎஸ்! சால்வைக்கும் "நோ".. என்னாச்சு? பரபரத்த சாத்தான்குளம்
சாத்தான்குளம்: வாழும் காமராஜர் விருதை வாங்குவதற்கு சகாயம் ஐஏஎஸ் மறுப்பு தெரிவித்தார். அதற்கு பதிலாக கருப்பட்டியை வாங்கி வந்த சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பேரவை சார்பில் முதல் ஆண்டு தொடக்க விழா, வாழும் காமராஜர் விருது வழங்கும் விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மக்கள் பாதை பேரியக்கத் தலைவருமான சகாயம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைத்து சகாயத்திற்கு வாழும் காமராஜர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விருதுகள் அறிவிப்பு
இதையடுத்து விருதுகளுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் வாழும் காமராஜர் என்ற விருதிற்கு சகாயத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால் ஷாக்கான சகாயம், பெருந்தலைவர் காமராஜருடன் என்னை ஒப்பிட்டு விருது வழங்க வேண்டாம்.

யாருமில்லை
அவருக்கு இணை யாருமில்லை என சகாயம் கூறினார். இதையடுத்து சால்வை போர்த்தியதையும் ஏற்க மறுத்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓடோடி போய் கருப்பட்டியை வாங்கி வந்து புத்தகங்களையும் கருப்படடியையும் சகாயத்திற்கு கொடுத்து கவுரவித்தனர்.

விருது எப்போது கிடைக்கும்
எப்போது விருது கிடைக்கும் என சிலர் காத்திருக்கும் நிலையில் தேடி வந்த விருதையும் சகாயம் ஏற்க மறுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என மக்களிடம் நன்மதிப்பை பெற்ற சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர்.

ரஜினி
ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் சகாயம் இணைவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் 7 ஆண்டுகளாக அதிகாரமே இல்லாத பணியில் இருந்ததால் சகாயம் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மதுரை கிரானைட் குவாரி குறித்து சகாயம் விசாரித்த போது அங்கு நரபலி கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் அந்த சுடுகாட்டிற்கு சென்றார்.

சுடுகாட்டில் படுத்திருந்த சகாயம்
அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்பு அளிக்காததால் அவரால் சடலங்களை தோண்டி பார்க்க முடியவில்லை. இரவு நெருங்கியது அந்த இடத்தை விட்டு போய்விட்டால் ஆதாரத்தை அழிக்க சடலங்களை தோண்டி எடுத்துவிடுவார்கள் என நினைத்த சகாயம் அந்த இரவை சுடுகாட்டிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications