உங்களைவிட்டு விலகிய எனக்கு எதுக்கு அமைப்பு செயலர் பதவி- போயஸுக்கு போன்போட்ட சைதை துரைசாமி
அதிமுக அமைப்புச் செயலராக தம்மை சசிகலா நியமித்ததை சைதை துரைசாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக அமைப்புச் செயலராக தம்மை திடீரென சசிகலா நியமித்ததில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியும் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
சசிகலாதான் அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என முதலில் நேரில் சென்று கெஞ்சியவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர். ஆனால் சைதை துரைசாமியை மன்னார்குடி கோஷ்டி நம்பவே இல்லையாம்.

இதனால் போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது எனவும் சைதை துரைசாமிக்கு உத்தரவு போட்டதாம் மன்னார்குடி கோஷ்டி. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தை அடிக்கடி சந்தித்து நீங்க அரசியலுக்கு வரவேண்டும் என சைதை துரைசாமி வலியுறுத்தினாராம்.
சைதை துரைசாமி தங்களை விட்டு அதிகமாக விலகிப் போவதை நடராஜன் விரும்பவில்லையாம். அதனால் அவருக்கு ஒரு பதவியை கொடுத்து நம்மோடு இருக்கிறார்னு காட்டலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார். இதன்படிதான் அமைப்புச் செயலர்களில் ஒருவராக சைதை துரைசாமியும் நியமிக்கப்பட்டாராம்.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே போயஸ் கார்டனுக்கு போனடித்த சைதை துரைசாமி, என்னைத்தான் வரவேண்டாம்னு சொல்லிட்டீங்களே.. அப்புறம் ஏன் இப்ப அமைப்புச் செயலர் பதவி? நானா கேட்டேன்? என கோபத்துடன் கொந்தளித்திருக்கிறார். செங்கோட்டையன், சைதை துரைசாமி என அடுத்தடுத்து பலரும் அமைப்புச் செயலர் பதவி வேண்டாம் என தூக்கி எறிவதால் மன்னார்குடி கோஷ்டி அதிர்ந்து கிடக்கிறதாம்.












Click it and Unblock the Notifications