7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை ஆக.8-க்கு ஒத்திவைப்பு
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை வரும் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோருக்கு தூகு தண்டனையும், ராபட்பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது ஜனாதிபதி முடிவெடுக்க 11 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டதையடுத்த தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கில் சிபிஐ விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனைகளைக் கைதிகளை மாநில அரசு விடுவிப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என தீர்ப்பளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இன்று விசாரணை நடைபெற இருந்தது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. அதில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக 7 தமிழர் விடுதலைக்கான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. பின்னர் வழக்கின் விசாரணை வரும் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழக அரசின் சீராய்வு மனு மீதும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications