For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை ஆக.8-க்கு ஒத்திவைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை வரும் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோருக்கு தூகு தண்டனையும், ராபட்பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

SC to hear TN review plead on Seven Tamils issue

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது ஜனாதிபதி முடிவெடுக்க 11 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டதையடுத்த தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இவ்வழக்கில் சிபிஐ விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனைகளைக் கைதிகளை மாநில அரசு விடுவிப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என தீர்ப்பளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இன்று விசாரணை நடைபெற இருந்தது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. அதில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக 7 தமிழர் விடுதலைக்கான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. பின்னர் வழக்கின் விசாரணை வரும் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழக அரசின் சீராய்வு மனு மீதும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

English summary
The Supreme court today to hear the Tamilnadu govt's review plea on Seven Tamils release issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X