செங்கோட்டை - நியூ ஆரியங்காவு அகல ரயில் பாதை நாளை முதல் திறப்பு
தென்காசி: செங்கோட்டை - நியூ ஆரியங்காவு அகல ரயில் பாதை நாளை முதல் திறக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சிலம்பு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யபப்டுகிறது.
செங்கோட்டை-புனலூர் இடையே 49.5 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இதனால் இம்மார்க்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடந்துவந்த அகல ரயில் பாதை திட்டப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதையின் இறுதிக்கட்ட ஆய்வை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து நியூஆரியங்காவு ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு, நடை மேடை, இருக்கை வசதிகள், வர்ணம் பூச்சு பணிகள் துரிதமாக நடைபெற்று முடிந்தது. இந்த பாதையில் நியூ அரியங்காவு, எட்மன், புனலூர் இடையே முடிந்துள்ள பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தனர். இதையடுத்து மார்ச் மாதத்தில் அந்த தடத்தில் ரயில் சேவை துவங்கும் என ரயில்வேத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு இடையே அகல ரயில் பாதை நாளை முதல் திறக்கப்படுகிறது. இதனை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைக்கிறார். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிடுகிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications