அய்யயோ...சசிகலாவையா நம்புவது? என் கணவருக்கு என்னாச்சு? செங்கோட்டையன் மனைவி புலம்பல்
சசிகலாவை ஆதரிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவரது குடும்பத்தினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: அதிமுக அவைத் தலைவர் பதவியில் செங்கொட்டையனை சசிகலா உட்கார வைத்தாலும் அவரது குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம். சசிகலாவால்தான் ஓரம்கட்டப்பட்ட செங்கோட்டையன் இப்போது அவராலேயே பதவி கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறாரே என அவரது மனைவி புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகத்தான் செங்கோட்டையன் இருந்து வந்தார். ஆனால் செங்கோட்டையனின் லீலைகளால் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்து அவரை ஓரம் கட்டிவைத்தார்.

செங்கோட்டையன்
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுகவில் மீண்டும் தலையெடுத்தார். தமக்கு அமைச்சர் பதவி, கட்சிப் பதவி தரக் கோரி போர்க்கொடி தூக்கினார்.

அவைத்தலைவர்
இதனால் சசிகலா அணியில் முக்கிய தளபதிகளில் ஒருவரானார் செங்கோட்டையன். தற்போது அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து மதுசூதனனை இடைக்கால பொதுச்செயலர் சசிகலா நீக்கிவிட்டு செங்கோட்டையனை அப்பதவியில் அமர வைத்துள்ளார்.

தப்பி ஓட்டம்
செங்கோட்டையன்தான் கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கவும் காரணமாக இருந்தார். அதிகாரிகள் ரெய்டு வரப் போகிறார்கள் என்பதற்காக நேற்று முக்காடு போட்டு ரிசார்ட்டில் இருந்து தப்பி ஓடினார் செங்கோட்டையன்.

மனைவி புலம்பல்
இதனிடையே சசிகலாவையா நம்புவது? என் கணவருக்கு என்னமோ ஆகிவிட்டது என செங்கோட்டையனின் மனைவி ஈஸ்வரி புலம்பி வருகிறாராம். இதேபோல் செங்கோட்டையனும் தமது உறவினர்களிடம், தமக்கு அமைச்சர் பதவி கிடைக்காது போல..எல்லாமும் வீணாகிவிட்டது என கூறியுள்ளாராம்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications