For Quick Alerts
For Daily Alerts
Just In
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை மின்சார ரயில்களில் நாளை முதல் தீவிர டிக்கெட் பரிசோதனை
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் நாளை(11ம் தேதி) முதல் 15ம் தேதி வரை தீவிர பயணச்சீட்டு பரிசோதனை செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.இதை நம்பியே அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் என பலர் உள்ளனர். பயணம் செய்வோரின் எண்ணிக்கை எப்படி அதிகமோ அதேபோல், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிகையும் அதிகமாகவுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற 11-ம் தேதி அதாவது நாளை முதல் 15-ம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தீவிர பயணச்சீட்டு பரிசோதனை செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வரும் நாள்களில் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
Comments
English summary
Southern Railway conducted a mass ticket checking in chennai on tomorrow
Story first published: Sunday, July 10, 2016, 0:15 [IST]