பாளை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்க கடைகள் திறப்பு
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான கடைகளை சிறை எஸ்.பி. கனகராஜ் திறந்து வைத்தார்.
தமிழக மத்திய சிறையில் உள்ள கைதிகள் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி கைவினை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் லட்டு, அல்வா, மிக்சர், சிப்ஸ், காராசேவ் மற்றும் மெழுகுவர்த்தி, ரெடிமேட் ஆடைகள், பாக்குமட்டை தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்து வருகின்றனர். இவற்றை விற்பனை செய்வதற்காக சிறை வளாகத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளை சிறை சூப்பிரண்டு கனகராஜ் திறந்து வைத்து பேசுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடையை முதல்வர் சென்னையில் திறந்து வைத்தார். இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள மற்ற சிறைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1700 கைதிகள் உள்ளனர். இதில் 600 பேர் தண்டனை கைதிகள், இவர்களில் 300 பேர் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். நாப்கின் தயாரிப்பு மற்றும் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
இங்கு தயாரிக்கப்படும் அல்வா திருச்சி, சென்னை மத்திய சிறைக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சிறை அங்காடி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும். குறைந்த லாபத்தில் இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதற்காக ரூ.50 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கிடைக்கும வருமானத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கும், 40 சதவீதம் முதலீடாகவும், 20 சதவீதம் கைதிகளின் குடும்பத்தினருக்கும், மீதமுள்ள 20 சதவீதம் நல நிதியில் சேர்க்கப்படும் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications