போதிய வெங்காய விளைச்சல் இல்லாததால் மகாராஷ்டிராவிடம் கையேந்தும் நிலையில் தமிழகம்!
தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாதாதால் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.
சென்னை: பல்லாரி வெங்காய விளைச்சல் இல்லாததால் மகராஷ்டிராவிடம் இருந்து வருவதை மட்டுமே தமிழக வியாபாரிகள் எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே, சிறு வெங்காயம் எனப்படும் உள்ளி விலை உயர்வு காரணமாக பலரும் பல்லாரி மற்றும் மலை பல்லாரியை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மழை பெய்தும் விளைச்சல் குறைந்துள்ளதால் பல்லாரி விலையும் ஏறி கொண்டே போகிறது. நெல்லை தச்சநல்லூரில் இன்று காலை நிலவரப்படி உள்ளி முதல் தரம் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது.

இது போல் சிட்டுள்ளி எனப்படும் சிவப்பு நிற வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இது சில்லரை விற்பனை கடைகளில் கூடுதலாக ரூ.20 வரை வைத்து விற்கப்படுவதால் ரூ.160 வரை விலை கொடுத்து பொது மக்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காய்கறி விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், தமிழகத்தில் உள்ளூர் வெங்காயம் வரத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே நின்று விட்டது. சிவகாசி, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வெங்காய வரத்து இல்லை. கர்நாடகா மாநிலத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக விலை உயர்வும் தொடர்ந்து வருகிறது. தற்போது மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் வரத்து இருக்கிறது. இப்போதைக்கு வெங்காய விலை குறைய வாய்ப்பு இல்லை. ஜனவரிக்கு பிறகு உள்ளூர் வெங்காயம் வர வாய்ப்பு உள்ளதால் அப்போதுதான் விலை குறையும் என்று தெரிவித்து உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications