சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீச்சு, கருப்புக் கொடி- நாம் தமிழர் கட்சியின் 58 பேர் கைது!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் போது முதலில் செருப்புகள் வீசப்பட்டன. பின்னர் 18-வது ஓவரில் திடீரென கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டங்களை நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடுமையான எதிர்ப்புக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில நபர்கள் தாங்கள் அணிந்திருந்த பனியன்களையும் கழட்டி வீசினர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முழக்கம் எழுப்பி செருப்பு வீச்சு- நாம் தமிழர் கட்சியின் 8 பேர் கைது https://t.co/nFn6P9xFIv #CSKvKKR #ChepaukStadium pic.twitter.com/9AH5qtChiy
— Oneindia Tamil (@thatsTamil) April 10, 2018
கேலரியின் மேல் தளத்தில் இருந்து பார்வையாளர்கள் 8 பேர் காலனிகளையும் தாங்கள் அணிந்திருந்த சட்டையையும் கழட்டி வீசினர். இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.மைதானத்திற்குள் காலணி வீசப்பட்டதால் கிரிக்கெட் போட்டி 2 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கருப்புக் கொடி- 50 பேர் கைது
இதனைத் தொடர்ந்து 18-வது ஓவரின் போது பார்வையாளர் வரிசையில் இருந்து திடீரென முழக்கங்கள் கிளம்பின. கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. கருப்புக் கொடிகளை பறக்கவிட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications