சிறப்பான முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில் என்ன தெரியுமா?
சென்னை: சட்டமன்றத்தின் சிறப்பான முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதியின் பதில் காமராஜர். அவையில் பேசாமல் இருந்தாலும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியவர் என்பதால் அவர் சிறப்பான முதல்வர் என்று கருணாநிதி ஒரு தருணத்தில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் சட்டசபைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக வைரவிழாவும் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு கருணாநிதி குறித்த சுவாரஸ்மான தகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். இதில் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் குறித்தும், சட்டமன்றம் குறித்து அவர் கூறிய கருத்துகள் உள்ளன.

சிறப்பான முதல்வர்
கருணாநிதியை பொருத்தமட்டில் சிறப்பான முதல்வர் யார் என்றால் அவரது பதில் பெருந்தலைவர் காமராஜர். அவையில் பேசாமல் இருந்தாலும் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார்.

முதல் பேச்சு
கடந்த 1957-இல் வெற்றி பெற்றபோது குளித்தலைத் தொகுதியில் உள்ள நங்கவரம் பண்ணை விவசாயிகளின் "கையேரு வாரம்-மாட்டேரு வாரம்" என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் கருணாநிதி பேசிய முதல் பேச்சாகும்.
பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் சட்டசபையில் முதல்நாள் அனுபவம் இருந்ததாம்.

அதிக நேரம் பேசிய நாள்
சட்டசபையில் கருணாநிதி அதிக நேரம் பேசிய நாள்கள் பல உண்டு. இருப்பினும் 1997-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, அவர் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.

பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?
எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்து நிற்பவர் அறிஞர் அண்ணாதான். அவருக்கு பிடித்த சபாநாயகர், ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-பின்னர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

மாணவனாக நினைப்பாராம்
சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது கற்றுக் கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். சட்டமன்றத்தில் முதல் முதலாக கருணாநிதி உட்கார்ந்திருந்த இருக்கை எண் 170.

அண்ணாவின் பாராட்டு
பெரும்பாலும் சட்டமன்றத்தில் கருணாநிதி பேசிய அத்தனை பேச்சுகளையுமே அண்ணா பாராட்டியிருக்கிறார். கருணாநிதியின் அமைச்சரவையிலே உள்ளவர்களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்க என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில், மனதிலே இடம் பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதற்காக அமைச்சரவையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.

கவர்ந்த சட்டமன்ற உறுப்பினர்
கருணாநிதியை கவர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜோதியம்மாள். காமெடியாக பேசும் சட்டமன்ற உறுப்பினர் ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த தட்சிணாமூர்த்தி கவுண்டர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications