கள்ளக்காதலி கொலை... செங்கல் சூளையில் புதைத்த பெற்றோர்... 3 மாதத்திற்குப் பின் வெளியான உண்மை
மகனுடன் சேர்ந்து வாழ்ந்த கள்ளக்காதலியை பெற்றோரே கொன்று புதைத்து செங்கல்சூளையில் புதைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே மகனுடன் குடும்பம் நடத்திய கள்ளக்காதலியை பெற்றோரே கழுத்தை நெறித்த கொன்று செங்கல் சூளையில் புதைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வில்லிபாளையத்தைச் சேர்ந்த சவுந்தர்யாக என்பவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுப்பாட்டால் கணவரை பிரிந்த அவருக்கு பரமத்தியைச் சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தினர்.

இது சூர்யாவின் பெற்றோரான மானோகரனுக்கும் சுமதிகுக்கும் பிடிக்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவுந்தர்யாவை அவரது தாய் வீட்டில் விட்டுவருவதாக கூறி அவர்களுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் சவுந்தர்யாவைக் காண அவரது தாய் வீட்டுக்கு சூர்யா சென்றுள்ளார். அப்போது அங்கு சவுந்தர்யா இல்லாததைக் கண்டு அவரது தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு சவுந்தர்யா இங்கு வரவேயில்லை என கூறியுள்ளார். என் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்ததாக சூர்யா கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சவுந்தர்யாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் சூர்யாவின் பெற்றோரை பிடித்து விசாரித்தனர். அப்போது சவுந்தர்யா எங்கள் மகனுடன் வைத்துள்ள தகாத உறவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரை செங்கல் சூளைக்கு அழைத்து சென்று சேலையால் கழுத்தை நெரித்து கொன்று அங்கேயே புதைத்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுமாறு கூறினர்.
சவுந்தர்யாவின் உடல் மாவட்ட எஸ்பி மற்றும் தாசில்தார் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகனின் கள்ளக்காதலியை பெற்றோரே கொன்று செங்கல் சூளைய்ல புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications