ஒரே மேடையில் சோனியா - கருணாநிதி பிரசாரம்: இளங்கோவன் தகவல்
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் சென்னையில் மே மாதம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான முயற்சி நடக்கிறது.

கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். துணைத்தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 4 அல்லது 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய கேட்டிருக்கிறோம். அவரும் கண்டிப்பாக வருவார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியிடப்படும். தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், இஸ்லமியர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். விகிதாச்சார அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தவறான கருத்தாகும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications