வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் பாஜகவினர் திட்டினர்.. சோபியா தந்தை குமுறல்
என் மகளை அசிங்கமாக தமிழிசை திட்டினார் என்று சோபியா தந்தை புகார் அளித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட 10 பேர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைதாகியுள்ள சோபியாவின் தந்தை புகார் அளித்துள்ளார்.
சென்னையில் இருந்து தூத்துகுடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டு, சோபியா என்ற பெண் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார்.

3 பிரிவுகளில் வழக்கு
இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை செளந்திரராஜன் விமானத்திலேயே அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சோபியா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை மிரட்டல்
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சோபியாவை 15 நாள் காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் தமிழிசை செளந்திராஜன் உட்பட 10 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர் என்று சோபியாவின் தந்தை சாமி என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

தகாத வார்த்தைகள்
செய்தியாளர்கள் முன்னிலையிலேயே இந்த பகீர் தகவலை அவர் கூறியுள்ளார். மேலும் தன் மகளை தகாத வார்த்தைகளால் பாஜகவினர் பேசியதாவும், அவை என்னவென்று வெளிப்படையாக என்னால் சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்தார். பின்னர், சோபியாவின் தந்தை தமிழிசை உள்ளிட்டவர்கள் தமக்கும், தன் குடும்பத்தினருக்கும் விடுத்த கொலைமிரட்டல் குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

கொலை மிரட்டல்
அந்த புகாரில், "என் மகளை அசிங்கமாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தும், எங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய தமிழிசை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications