நெல்லை-சென்னை இடையே பகல் நேர சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு துவக்கம்
நெல்லை: கூட்ட நேரிசலை சமாளிப்பதற்காக நெல்லை-சென்னை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துளளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நெல்லை-சென்னை இடையே (வண்டி எண் 06024) அதிவிரைவு ரயில் பிப்ரவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தை அடையும். அது போல் மறுமார்க்கத்தில் பிப்ரவரி 16, 23 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்(எண் 06025) அன்று இரவு 11.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வரும். இந்த ரயிலில் 17 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும், 4 பொது பெட்டிகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், பெரம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நி்ற்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று துவங்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications