For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் மறைவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது: இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா இரங்கல்

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான கருணாநிதியின் மறைவுச் செய்தி தன்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். 95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Sri Lanka President Maithripala Sirisena deep saddened to death of Karunanidhi

இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட் செய்துள்ளார் அதில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து குறிப்பிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Sri Lanka President Maithripala Sirisena deep saddened to death of Karunanidhi. Maithripala Sirisena offered deep condolence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X