திருச்சி அகதிகள் முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் – 20 அகதிகள் தற்கொலை முயற்சி!
திருச்சி: திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளில் 20 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் கொட்டப்பட்டு என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் இன்று தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்.
இதுதொடர்பாக இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து 20 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.