அனைத்துக் கட்சிக் கூட்டம்.. கோர்ட்டில் "டக் டக்" பதில்.. அசத்திய ஸ்டாலின்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த தனது கொளத்தூர் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகி குறுக்கு விசாரணைக்குப் பதிலளித்தார் மு.க.ஸ்டாலின்.
சென்னை: திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று முக்கியமான நாளாக மாறிப் போய் விட்டது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வெற்றிகரமாக நடித்த முடித்தார் ஸ்டாலின். அதேவேகத்தில் கோர்ட்டிலும் ஆஜராகி தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குறுக்கு விசாரணையில் ஆஜராகி மின்னல் வேகத்தில் பதிலளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் அனைத்துக் கூட்சிக் கூட்டம் ஒன்றை திமுக கூட்டியிருந்தது. இதில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. மற்ற அனைத்துக் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

ஆளுங்கட்சியான அதிமுக எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்த முன்வராத நிலையில் திமுக நடத்திய இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட பெரிய வெற்றிதான்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜரானார் ஸ்டாலின். 2011 சட்டசபைத் தேர்தலில் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி ஸ்டாலின் ஆஜரானார்.
அப்போது ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. வாக்கு சேகரிக்க எத்தனை முறை தொகுதிக்குச் சென்றீர்கள் என்ற கேள்விக்கு 4 முறை என்று பதிலளித்தார் ஸ்டாலின். அப்போது ஆரத்தி எடுத்தார்களா என்ற கேள்விக்கு, தமிழ்க் கலாச்சாரத்தில் ஆரத்தி எடுப்பது வழக்கம், எடுத்தார்கள் என்றார்.
வாக்கு சேகரிக்கப் போகும் அங்கு பட்டாசு வெடித்தார்களா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலைக் கூறினார் ஸ்டாலின். உங்களது பிரசாரக் குழுவின் தலைமைப் அலுவலகம் எங்கு இருந்தது என்ற கேள்விக்கு ஞாபகம் இல்லை என்பது ஸ்டாலின் பதிலளித்தார். எத்தனை தேர்தல் பிரசார அலுவலகங்கள் இருந்தன என்ற கேள்விக்கு எங்கு தேவைப்பட்டதோ அங்கெல்லாம் வைத்தோம் என்றார்.
கொளத்தூர் போகும்போது என்ன ஏற்பாடு செய்தார்கள் என்ற கேள்விக்கு, திறந்த ஜீப்பில் போவேன். மக்கள் மட்டும் கூடியிருப்பார்கள். வாக்கு சேகரிக்கும்போது மேளதாளம் இருக்காது. உடன் போலீசார், பத்திரிகையாளர்கள் வருவார்கள் என்றார் ஸ்டாலின்.
கொளத்தூர் தொகுதியில் தங்கி பிரச்சாரம் செய்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார் ஸ்டாலின்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications