சபாநாயகர் கட்சி சார்பின்றி செயல்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் திமுக எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும் என்றும், எதிரிகட்சியாக அல்ல என்றும் திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி சார்பின்றி சபாநாயகர் அவையில் செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
15வது சட்டசபையின் சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை, இன்று சட்டசபையில் எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர் தி.மு.க சார்பாக புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கட்சி சார்பின்றி சபாநாயகர் அவையில் செயல்பட வலியுறுத்திய அவர், நூற்றாண்டு காண உள்ள அவையில் எதிர்கட்சித் தலைவராக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.
அவையில் திமுக எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும் என்றும், எதிரிகட்சியாக அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் இந்தியாவிலேயே மிகவும் சிறப்புக்குரியதாக தமிழக சட்டப்பேரவை விளங்குவதாக குறிப்பிட்டார். இந்தியாவிலேயே முன்னோடியாக பல சட்டங்களை தமிழக பேரவை இயற்றியுள்ளது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications