கோவில்பட்டியில் விரைவில்.. விவசாயிகள் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு சிலை!
கோவில்பட்டி: விவசாயிகளின் போராட்டங்களை முன்னிறுத்தி அவர்களுக்காக பாடுபட்டவரும், விவசாயிகள் சங்கத்தலைவராக பதவி வகித்தவருமான மறைந்த நாராயணசாமி நாயுடுவிற்கு தமிழகத்தில் முதன்முதலாக கோவில்பட்டியில் சிலை நிறுவப்பட உள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமான 1930 ஆம் ஆண்டிலேயே விவசாயத்திற்கான போராட்டங்கள் துவங்கி விட்டன. கடந்த 1966 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கமானது உருவெடுக்கப்பட்டது.

அப்பொழுது நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துமல்ல ரெட்டியார், முத்துசாமி கவுண்டர், டாக்டர் .சிவசாமி, டாக்டர்.கொண்டல்சாமி, மயில்சாமி, வி.கே.ராமசாமி, திருமதி சுந்தராம்பாள், நஞ்சகவுடர், கு.வரதராஜன், சாத்தூர் ஜெகந்நாதன் போன்ற பலர் பிரச்சார தளத்தை அமைத்து விவசாயிகள் சங்க அமைப்பைக் உருவாக்கினர்.
அப்போதைய காலகட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவராக பதவி வகித்த நாராயணசாமி நாயுடு அவர்கள் கோவை மாவட்டத்தில் செங்காலிப் பாளையத்தில் பிறந்தவர். விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விவசாயிகள் போராட்டத்தை எடுத்துச் செல்ல முயற்சிகள் செய்தவர் அவர். நாராயணசாமி நாயுடு பொதுத்தேர்தல் நடைபெற்ற கால கட்டத்தில் கோவில்பட்டி பயணியர் விடுதியில் 1984ம் ஆண்டில் காலமானார்.
அவர் தன்னுடைய கடைசி காலங்களைக் கழித்த கோவில்பட்டி பகுதியில் அவருக்கு சிலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மேலும், தமிழக விவசாயிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்த பிரச்சினைகள் மற்றும் போரட்டங்கள் குறித்த நூலும் வெளியிடப்பட உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications