For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் ஜெ. அன்பழகனை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன்.. சொல்கிறார் சபாநாயகர்!

சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெ.அன்பழகனை வைத்துக்கொண்டு தினமும் கஷ்டப்படுகிறேன் என சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.அன்பழகனால் சட்டசபையில் அல்லல்படும் சபாநாயகர்- வீடியோ

    சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெ.அன்பழகனை வைத்துக்கொண்டு தினமும் கஷ்டப்படுகிறேன் என சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டசபையில் நகைச்சுவைகளும் காமெடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

    ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கிண்டல் செய்வதும் கேலி செய்வதுமாக நகர்கிறது சட்டசபை கூட்டம்.

    போக்குவரத்துத்துறை

    போக்குவரத்துத்துறை

    கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

    செல்லமாக கடிந்த சபாநாயகர்

    செல்லமாக கடிந்த சபாநாயகர்

    இந்நிலையில் திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகனை செல்லமாக கடிந்துள்ளார் சபாநாயகர் தனபால். அதாவது, பேச வாய்ப்பு கேட்டார் எதிர்க்கட்சி உறுப்பினரான அன்பழகன்.

    தினம் தினம் கஷ்டம்

    தினம் தினம் கஷ்டம்

    அதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம், தினம் கஷ்டப்படுகிறேன் என்றார்.

    புலம்பிய சபாநாயகர்

    புலம்பிய சபாநாயகர்

    பேரவைக்கு தினமும் தாமதமாக வரும் ஜெ.அன்பழகன் வந்தவுடன் பேசுவதற்கு அனுமதி கோருகிறார். அனுமதிக்கவில்லை என்றால் வெளியில் சென்று விடுகிறார் என்றார் சபாநாயகர் தனபால்.

    English summary
    Speaker Dhanapal said in assembely that he is struggling every day with the opposition member J. Anbazhagan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X