தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனர் அருணாசலம் காலமானார்
சென்னை: தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனரான சென்னை அடையாறு மாணவர் நகலகம் உரிமையாளர் அருணாசலம் காலமானார்.
தமிழ் இணையத்தின் முன்னோடியான இன்தாம் (Intamm) என்ற இணையதளத்தை நிறுவிய சவுரிராஜனின் தந்தை அருணாச்சலம். தமிழ் சான்றோர் பேரவை மூலமாக தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர்.

தந்தை பெரியார் தமிழ் இசை மன்றம் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய இசைகளான நாட்டுபுறப்பாட்டு, பறை உள்ளிட்டவற்றை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகளை நடத்தியவர்.
சென்னை அடையாறில் மாணவர் நகலகம் என்ற பெயரில் பல்வேறு கிளைகளையும் நிறுவியவர். மாணவர் புத்தக பண்ணை மூலமாக பல்வேறு நூல்களை வெளியிட்டவர். நந்தன் இதழின் ஆசிரியராகவும் ஆனாரூனா என்ற பெயரில் கட்டுரைகளையும் எழுதியவர் அருணாச்சலம்.
அரசு அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அருணாச்சலம் பின்னர் தொழில் அதிபராகவும் தமிழர் நலன் சார்ந்தும் இயங்கியவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications