நெல்லை-பதற்றமான வாக்கு சாவடிகளை கண்காணிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகளில் பணியாற்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு தினத்தன்று காலையில் லேப்டாப்புடன் ஆஜாராக வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் , நாங்குநேரி, ராதாபுரம், சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியும் அடங்கும்.
இந்த 10 சட்டமன்ற தொகுதியிலும் கள்ள ஓட்டு புகார், 90 சதவீதத்திற்கும் அதிக வாக்கு பதிவு, பிரச்சனை உருவாகும் இடங்கள், மத, சாதி ரீதியாக பிரச்சனை ஏற்படும் இடங்கள் என்ற அடிப்படையில் பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
வீடியோ பதிவு
இந்த இரண்டு தொகுதிகளிலும் 604 வாக்கு சாவடிகள் பதற்றமானவே என தெரிய வந்துள்ளது. பதற்றமான வாக்கு சாவடிகளில் முழுவதும் வீடியோ முலம் பதிவு செய்யப்படுகிறது. அதற்காக அனைத்து வாக்கு சாவடிகளிலும் லேப்டாப், வெப் கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
605 மாணவர்கள்
மேலும் இந்த வாக்கு சாவடிகளில் பணியாற்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 605 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேர்தல் நாளான்று அவர்களுக்கு ஓதுக்கப்பட்ட அந்தந்த தேர்தல் வாக்கு சாவடிகளில் காலை முதலே லேப்டாப் கொண்டு ஆஜாராக வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பதட்டமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 1920 மாணவர்கள்
சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட மொத்தம் 1920 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1280 மாணவர்கள் லேப்டாப்களில் உள்ள வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பார்கள். இதனை அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்கலாம். மீதமுள்ள மாணவர்கள், வாக்குச்சாவடிகளில் நிகழும் சம்பவங்களை கேமரா மூலம் பதிவு செய்வார்கள்.
இணையதள வசதி
மாணவர்களுக்குத் தேவையான இணையதள வசதி ஏற்படுத்தித் தரப்படும். அதிக கண்காணிப்பு தேவைப்படும் சாவடிகளில் இந்த மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுதொடர்பாக மாணவர்களுக்கு ஓரிரு நாள்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications