Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் நட்ட மரக்கன்றுகளை பிடுங்கியெறிவதா? சப் இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு!

பள்ளி மாணவிகள் நட்ட மரங்களை காவல் உதவி ஆய்வாளர் பிடுங்கி எறிந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் நட்ட மரக்கன்றுகளை பிடுங்கியெறிவதா?-வீடியோ

    ஈரோடு: ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் சாலையோரம் நட்ட மரங்களை அகற்றிய காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள், பள்ளியில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை சாலையோரம் நட்டு வைத்தனர். பின்னர் மரக்கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு 4 கம்புகளையும் நட்டுவைத்து விட்டு சென்றனர்.

    Sub Inspector removed plants near Erode

    ஆனால் இந்த மரக்கன்றுகள் தமக்கு இடையூறாக இருப்பதாக அங்கு வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் என்பவர், இன்று காலைஅங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் சிலவற்றையும், பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த கம்பு வேலியினையும் பிடுங்கி வீச ஆரம்பித்தார்.

    இதனால் மனம் வெம்பிய மாணவிகள் அப்பகுதி பெண்களுடன் இணைந்து, மரங்களை ஏன் இப்படி சேதப்படுத்துகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு ஜெயச்சந்திரனோ மிரட்டும் தொணியில் அவர்களுக்கு பதிலளித்து சென்றுள்ளார்.

    மரக்கன்றுகளை காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அகற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. அனைத்து தரப்பினரிடமும் இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளரை ஈரோடு மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+