பொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ
பொதுச் செயலாளரை அதிமுகவினர் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களது உரிமை; ஆனால் முதல்வரை தமிழக மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே இருப்பதால், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுகவின் பொதுக்குழு சசிகலாவைத் தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை உடையது. இது அக்கட்சியின் உள் விவகாரம் என்று விலகி நிற்க முடியாது. ஏனெனில் அக்கட்சி இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாகவும் உள்ளது. அதனால் அடுத்த முதலமைச்சர் பொறுப்பிற்கும் அவருடைய பெயர் முன்மொழியப் படலாம். அவ்வாறு இல்லையெனினும், முதலமைச்சரையும் கட்டுப்பத்தும் அதிகாரம் அப்பதவிக்கு உண்டு.

யாரை வேண்டுமானாலும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் கட்சித் தலைவராகவும், அதன் வழி தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்கள். இருப்பினும் சட்டத்தை மீறிய பொது அறத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று, அதன் பின் முதலமைச்சராக அமர்வதே நியாயம்.
தங்கள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளரை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுப்பதே சரியானது. ஆதலால் தமிழகத்திற்கு இன்றைய உடனடித் தேவை ஒரு பொதுத் தேர்தல் என்று சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications