நடிகை சுகன்யா வழக்கு: ரூ 10 லட்சம் தர சன் டிவிக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகை சுகன்யா தொடுத்த வழக்கில் சன் தொலைக்காட்சி ரூ.10 லட்சத்து 500 வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நக்கீரன் இதழ் சார்பில், மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அந்தப் பேட்டி வீடியோவாகவும் பதிவும் செய்யப்பட்டது.

பின்னர் அந்த வீடியோ, "நேருக்கு நேர்' என்ற பெயரில் சன் தொலைக்காட்சியில் கடந்த 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 7 பகுதிகளாக வெளியானது.
அதில் நடிகை சுகன்யாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகள் இடம்பெற்றிருந்தாகவும் எனவே, அந்தப் பேட்டியை வெளியிட்ட நக்கீரன் வார இதழ், சன் தொலைக்காட்சி, கருத்து தெரிவித்த வீரப்பன் ஆகியோருக்கு எதிராகவும் நடிகை சுகன்யா சென்னை 15-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதில், தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 500 வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை 15-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி பி.சந்திரசேகரன் முன் புதன்கிழமை (ஏப்.15) விசாரணைக்கு வந்தது.
அப்போது நக்கீரன் இதழின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் வீரப்பனின் பேட்டியை வெளியிட்டால் அதற்கு நக்கீரன் பொறுப்பாகாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சன் தொலைக்காட்சிக்கு அந்த விடியோ பதிவை அளித்ததாகத் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வீரப்பன் இறந்துவிட்டதால் வீரப்பனையும், நக்கீரனையும் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாகவும், நடிகை சுகன்யாவுக்கு சன் தொலைக்காட்சி நஷ்ட ஈடாக ரூ.10 லட்சத்து 500 வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications