நீங்க அதிகாரியா... ரவுடியா... வாணியம்பாடி அதிகாரியை அழைத்து வெளுத்து வாங்கிய அமைச்சர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையோர வியாபாரிகளிடம் அதிகார மமதையில் ஆட்டம் போட்ட அதிகாரி சிசில் தாமசுக்கு மேலிடத்தில் இருந்து கடுமையாக டோஸ் விழுந்துள்ளது.
Recommended Video
அதிகாரியை போல் நடந்துகொள்ளாமல் ஒரு ரவுடியை போல் நடந்தால் அரசுக்கு தான் தேவையின்றி கெட்டப்பெயர் ஏற்படும் என வெளுத்து வாங்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆய்வு என்ற தலைப்பில் செய்தியில் இடம்பிடிக்க நினைத்து, தனது ஆட்களை வைத்து தாமே வீடியோ எடுத்து இப்போது வம்பில் சிக்கித்தவிக்கிறார் வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமஸ்.

வாணியம்பாடி
வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்மையில் புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்குள் வருகிறது வாணியம்பாடி. இந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற நிலோபர் கபில் அமைச்சராகவும் உள்ளார். இந்த சூழலில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நேற்று ஆய்வு நடத்த சென்ற போது, வியாபாரிகளிடம் இருந்து பழங்களை பறித்து குப்பையில் கொட்டியதோடு ஒரு பழ வண்டியை தலைகவிழ சாய்க்கவும் செய்தார்.

உள்ளூர் அமைச்சர்
இந்தக் காட்சி நேற்று பிற்பகல் முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன் கடும் கண்டனத்திற்கும் உள்ளானது. இதுமட்டுமல்லாமல் அந்த அதிகாரி சிசில் தாமஸ் வியாபாரிகளின் சாபத்திற்கும் உள்ளானார். வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த நடவடிக்கையால் உள்ளூர் அமைச்சரான நிலோபர் கபில் கடும் கோபம் கொண்டார். மேலும்,இது போன்ற செயல்களால் உள்ளூர் மக்கள் தன் மீது வருத்தப்படுவார்கள் என எண்ணினார்.

அறிவுரை
இதையடுத்து அவரை அழைத்து பேசிய அமைச்சர், உங்களால் அரசுக்கு தான் மக்கள் மத்தியில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்றும், வியாபாரிகளிடம் நடந்துகொண்ட விதம் தவறானது எனவும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார். மேலும், மாவட்ட அமைச்சரான கே.சி.வீரமணி கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றுள்ளது. அவரும் இதைப்பார்த்து விட்டு அவர் பங்குக்கு அந்த அதிகாரியை அழைத்து தனது பாணியில் அறிவுரை கூறியிருக்கிறார்.

ஏற்க மறுப்பு
இதையடுத்து தான் இன்று ஊடகங்களை அழைத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவே இது போன்று செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு, சிசில் தாமஸை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை தாங்கள் ஓயப்போவதில்லை எனவும் கூறுகிறார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில செயலாளர் கோவிந்தராஜுலு.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications