Breaking News: 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.. அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரை
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 2 மணி நேரமாக கூட்டம் நடந்தது.
இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும் - ஜெயக்குமார்
இதில் எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது - ஜெயக்குமார்
இன்றே தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் - ஜெயக்குமார்
ஒட்டுமொத்த தமிழரின் எண்ணம் 7 தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்பது - ஜெயக்குமார்
ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்தான் இது - ஜெயக்குமார்
அன்று நிறைவேறாமல் போய் விட்டது.. இன்று நிறைவேறும் - ஜெயக்குமார்
முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பற்றி ஆலோசனை
உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் கருணை மனுவை 161வது சட்ட பிரிவின்கீழ் பரிசீலிக்கலாம் என உத்தரவு-ஜெயக்குமார்
மற்ற 6 பேரையும் சேர்த்து 7 நபர்களையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவு-ஜெயக்குமார்