வென்றது பெண்களின் போராட்டம்... டாஸ்மாக் கடையை மூட திருப்பூர் கலெக்டர் உத்தரவு
திருப்பூர் சாமளாபுரத்தில் திறக்க உள்ள டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் நேற்று தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்தது.
டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடை மூட உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications