எப்புடி சார்? வாயால் ஸ்டாலின், அன்பில் மகேஸ் உருவ படம்.. அசால்டாக வரைந்து கோரிக்கை வைத்த ஆசிரியர்
கள்ளக்குறிச்சி: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது படங்களை வாயால் வரைந்து கோரிக்கை வைத்து இருக்கிறார் ஓவிய ஆசிரியர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நூதன முறையில் இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் செல்வம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணலூர்பேட்டையை சேர்ந்த சு.செல்வம். இவர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது கவனத்தை ஈர்க்கும் புதிய யுக்தியை கையில் எடுத்தார்.

அதற்காக கைகளை பயன்படுத்தாமல், "வாயால்" ஒரே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது படத்தை வரைந்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகியப் பாடப்பிரிவுகளை சொல்லித்தரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேர் இருக்கிறார்கள்.

13 ஆவது ஆண்டாக பணி நிரந்தரம் ஆகாமல் குறைவான மாத சம்பளம், உணவு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுகின்றனர். விலைவாசி உயர்வால் குடும்ப பொருளாதாரத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் தவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் 181 வது உறுதி மொழியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டி பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது கவனத்தை ஈர்க்க இந்த முயற்சியை கையில் எடுத்து உள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள 181 வது உறுதிமொழியான பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை நிறைவேற்றி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டி 'ப்ளீஸ் எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும்' என்ற வாசகத்துடன் வாயால் ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி படத்தை 15 நிமிடங்களில் வரைந்து நூதன முறையில் கோரிக்கை வைத்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications