Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூர் கலரே மாறுது.. ரூ.400 கோடியில் டைடல் பார்க்.. திட்ட அறிக்கை, ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள டைடல் பார்க் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயார் செய்யும் பணி மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளை கொண்ட வகையில் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓசூரில் டைடல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் டைடல் பூங்காவிற்கான மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். இதிலிருந்து ஒரு மாதிரியை தமிழ்நாடு அரசு இறுதி செய்யும்.

Tender Invited for detailed project report on 400 Crore Tidal Park Project in Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அருகிலுள்ள பெங்களூருக்கு இணையான வளர்ச்சியை ஓசூரில் உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் டைடல் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓசூரில் உருவாக உள்ள டைடல் உயர் தொழில்நுட்ப பூங்கா மாநிலத்தின் மற்ற பகுதிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவுப்படுத்தும் முக்கிய முயற்சியாகவே கருதப்படுகிறது. மேலும், இந்த டைடல் பூங்காவின் மூலம் புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என்பதோடு பல சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாகவும், ஓசூர் மாறுவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டின் வடமேற்கு மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் வாய்ப்பை உருவாக்க முடியும். இப்பகுதிகளில் வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்கள் அவர்களது சொந்த ஊர்களிலேயே வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளில் தொழில் துறையில் மெகா முதலீட்டை சென்னையை தாண்டி பிற மாவட்டங்களுக்கும் கொண்டு வர கவனம் செலுத்தி வருவதாகவும், இது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக விளங்கும் என தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள டைடல் பார்க் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயார் செய்யும் பணி மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் டைடல் பூங்காவிற்கான மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். இதிலிருந்து ஒரு மாதிரியை தமிழ்நாடு அரசு இறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+