அடுத்தடுத்து 3 பேருடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த சுதா... பரபரப்பு தகவல்கள்
குமரி மாவட்டம் தக்கலையில் கணவர் கொலையில் கைது செய்யப்பட்ட பெண் சுதா அடுத்தடுத்து 3 ஆண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.
Recommended Video

தக்கலை: குமரி மாவட்டம் தக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவரை கொலை செய்த சுதா அடுத்தடுத்து 3 ஆண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.
குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ராஜசேகரன்(40). இவரை கடந்த 2003-ஆம் ஆண்டு சுதா என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இதனிடையே ராஜசேகரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஆன்லின் ஷிபு என்பவருடன் சுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து கொண்டனர்.

வெளிநாட்டுக்கு வேலை
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக சுதா, ராஜசேகரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இறுதியாக 2007-ஆம் ஆண்டு சுதாவையும் , மகனையும் பார்க்க வந்த ராஜசேகர் மாயமாகிவிட்டார்.

11 ஆண்டுகள் கழித்து
கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியா வந்த ராஜசேகர், தன்னால் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது என்று கூறிவிட்டு உள்ளூரிலேயே கிடைக்கும் வேலையை செய்து வந்தார். இதனால் வேலையில்லாத நேரத்தில் அவர் வீட்டில் இருந்ததால் சுதாவால் காதலை தொடர முடியவில்லை. இதனால் கொலை செய்ய திட்டமிட்டார்.

மற்றொருவருடன் தொடர்பு
கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜசேகரை சுதாவும், கள்ளக்காதலன் ஆன்லினும் அரிவாளால் வெட்டி கொன்றனர். சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிவிட்டனர். இதனிடையே அந்த வீட்டை காலி செய்து விட்டு கருங்கல் பகுதிக்கு சென்ற சுதா அங்கு சென்றும் தனது காம லீலைகளை செய்ய தொடங்கினார்.

அடுத்தடுத்து 3 பேர்
அந்த பகுதியில் ராபர்ட் என்பவருடன் சுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் உல்லாசமாக சுற்றிய நிலையில் தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். காதலித்து திருமணமான ராஜசேகர் உள்பட 3 ஆண்களுடன் சுதா அடுத்தடுத்து உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications