திருமங்கலம் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவி விட்டது.. அன்புமணி
சென்னை: தமிழகம் முழுவதும் திருமங்கலம் கலாச்சாரம் பரவி விட்டது. இது இந்தியா முழுவதும் பரவினால் மிகப் பெரிய விளைவு ஏற்பட்டு விடும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அன்புமணி. அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு கடிதம் எழுத உள்ளேன். அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து, நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்த உள்ளேன். தமிழக சட்டசபை தேர்தல் நியாயமற்ற முறையில் நடந்தது. இந்த தேர்தல் ஒரு கேலி கூத்தாக இருந்தது.

பணத்தை வைத்தும், அதிகாரத்தை வைத்தும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தியும் வெற்றி பெற்றுள்ளார்கள். இனிமேல் நடக்கும் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என கொடுத்தார்கள். அடுத்து நாடளுமன்றத் தேர்தலில் 4 ஆயிரம், 5 ஆயிரம் பணம் கொடுப்பார்கள்.
இது இந்தியாவில் பரவினால், பணம் வைத்துள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். திருமங்கலம் கலாச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டின் கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவினால் மிகப்பெரிய விளைவு ஏற்படும்.
தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பணம் கொடுத்தது தேர்தலுக்கு பிறகு தெரிய வந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை தகுதி நீக்கம் செய்வதுடன் அங்கீகாரத்தை ரத்து செய்யும் வகையி்ல் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications