மெரினா வன்முறை குறித்து பொய் பிரச்சாரம் செய்வதா? நடராஜனுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

மெரினா வன்முறை குறித்து சசிகலா கணவர் நடராஜன் பொய் பிரச்சாரம் செய்வதாக தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினா புரட்சியின் போது நிகழ்ந்த வன்முறை குறித்து பொய் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு புரட்சியின் போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினை புரட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை; இதனால் ஸ்டாலின்தான் வன்முறையை தூண்டிவிட்டார் என குற்றம்சாட்டியிருந்தார் நடராஜன்.

Thirunavukkarasar condemns Natarajan

நடராஜனின் இந்த பேச்சுக்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருநாவுக்கரசர் கூறுகையில், மெரினா வன்முறை தொடர்பாக நடராஜன் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் மறைந்தபோதும் நடராஜன் தரப்புக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுத் தந்ததில் திருநாவுக்கரசர் முனைப்போடு இருந்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+