முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - திருவாரூர் கலெக்டர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்
திருவாரூர்: திருவாரூரில், மர்மநபர்களால் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர் மதிவாணன்.
திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் மதிவாணன். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது இவரது வழக்கம். அந்தவகையில், நேற்று காலை நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே முட்புதரில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு மதிவாணன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மதிவாணன் முட்புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே பிறந்து சில நாட்களே ஆன அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டார். இதையடுத்து அவர், குழந்தையை முட்புதர்களில் இருந்து பத்திரமாக மீட்டு, தனது கார் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சைக்காக அக்குழந்தை அனுமதிக்கப் பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கலெக்டர் மதிவாணன் கூறியதாவது :-
நான் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது விளையாட்டு மைதானம் அருகே முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தேன். அப் போது ஒரு அழகான ஆண் குழந்தை கிடந்தது. இந்த குழந்தை திருவாரூர் மருத்து வமனை டாக்டர்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ஆதரவற்ற குழந்தையாக இருப்பதால், சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத் தில் சேர்க்கவும், அதை தொடர்ந்து அரசு அங்கீகாரம் பெற்ற திண்டுக்கல் கஸ் தூர்பாகாந்தி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பிறந்து சில நாட்களே ஆனது என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதால், அந்த குழந்தையின் தாய் யார், இவ்வாறுக் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றார்கள் என்பது பற்றி திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications