நெஞ்சை அதிர வைக்கும் உஷா கணவரின் வைரல் படம்
Recommended Video
திருச்சி: போலீசாரால் விரட்டியபோது பைக்கில் இருந்து விழுந்து உயிரிழந்த உஷாவின் கணவர் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில், ஹெல்மெட் அணியாதவரை பிடிக்கும் சோதனையில் நேற்று இரவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அப்போது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜா மற்றும் உஷா என்ற தம்பதியினர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பைக்கில் அவர்களை விரட்டி சென்ற காமராஜ் எட்டி உதைத்ததாகவும், இதில் ராஜா கட்டுப்பாட்டை இழந்து பைக் சரிந்ததில் உஷா பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் உஷாவின் உடலில் இருந்து அவரது நகைகளை கழற்றி ராஜாவிடம் கொடுக்கும் ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உஷாவின் ரத்த கறைபடிந்த சட்டையுடன் ராஜா விம்மி அழும் காட்சி காண்போரை கலங்க வைப்பது.
மனைவி கர்ப்பிணியான சேதி அறிந்தது முதல், ஆயிரம் கனவுகளுடன், சிறகடித்து பறந்த ராஜாவின் உள்ளம் என்னபாடுபடும் என்பதை இந்த போட்டோ உரக்க சொல்வதை போல உள்ளது.