'மெர்சல' விட்டுவிட்டு போய் சென்சார் போர்டுக்கு எதிராக போராடுங்க.. பாஜக தலைவர்களுக்கு திருமா குட்டு!
மெர்சல் சென்சார் போர்டு போய் உரிய தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியே வந்துள்ளது. அப்படியானால், சென்சார் போர்டு என்கிற தணிக்கை துறைக்கு எதிராகத்தான் இவர்கள் போராட வேண்டும், படத்திற்கு எதிராக அல்ல என்றார்
சென்னை: தணிக்கைக்குழுவிற்கு எதிராகத்தான் போராடவேண்டுமே தவிர மெர்சல் படத்தை எதிர்க்கக்கூடாது என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பு நீக்கம் போன்றவை குறித்த விமர்சன வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் படம் சென்சார் போர்டு போய் உரிய தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியே வந்துள்ளது. அப்படியானால், சென்சார் போர்டு என்கிற தணிக்கை துறைக்கு எதிராகத்தான் இவர்கள் போராட வேண்டும், படத்திற்கு எதிராக அல்ல என்றார் திருமாவளவன்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மத்திய மருத்துவக்குழுவின் தமிழக பயணம் ஒப்புக்காகவே அமைந்தது. அதனால் பயன் ஏதும் இல்லை. அரசுப்போக்குவரத்து கழக கட்டடங்களின் தன்மை பற்றி ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் அரசு அலுவலக கட்டடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு ஆய்வு குழுவை அமைக்க வேண்டும். பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து பலியான ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications