நெல்லை எஸ்.பி சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..தமிழக அரசு அதிரடி.. காரணம் என்ன?
நெல்லை: நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்பு பட்டியலில் வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான எல்.பாலாஜிக்கு நெல்லை எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். இவர் தனக்கு கீழ் வரும் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. பல்வீர்சிங் மீது புகார்கள் எழுந்ததும் அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றிய தமிழக அரசு, அடுத்த சில நாட்களில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது. பல்வீர் சிங் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உதவி கலெக்டர் முகம்மது சபீர் விசாரணை நடத்தி வருகிறார்.
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் போலீசார் உள்பட 13 பேர் இதுவரை ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்பு பட்டியலில் வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான எல்.பாலாஜிக்கு நெல்லை எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெல்லை மாவட்ட எஸ்.பி மீது தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
நெல்லையில் கல்லூரி மாணவி ராமலட்சுமி.. படுக்கை அறையில் இருந்த கோலம்.. ஆடிப்போன பெற்றோர் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications