Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீச்சர் விட்டு டீச்சர் தாவிய ஆசிரியர்.. தட்டிக் கேட்டால் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல்.. கைது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ஆசிரியையுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வரும் ஆசிரியர் ஒருவர், இன்னொரு ஆசிரியையுடன் இன்னொரு கள்ளக்காதலில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆசிரியை தட்டிக் கேட்டபோது உனது ஆபாசப் படத்தை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்தவர் நாகஜோதி. அரசு ஆசிரியையாக இருக்கிறார். இவர் தற்போது திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிக்கிறார். இவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:

Tirupur teacher arrested for threatening his live in partner

நான் மதுரை மாவட்டம் டி. கள்ளிப்பட்டியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் காளீஸ்வரன். அவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் எனக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. குடும்பத்தை விட்டு பிரிந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தோம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து திருப்பூருக்கு இடம்மாறி வந்தோம். இங்கு வந்த நாங்கள் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தோம். காளீஸ்வரன் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நான் வேறு பள்ளியில் வேலை செய்து வருகிறேன்.

இந்நிலையில் ஆசிரியர் காளீஸ்வரனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அது குறித்து நான் கண்காணிக்க ஆரம்பித்தேன். அப்போது காளீஸ்வரனுக்கு இன்னொரு ஆசிரியையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நான் இது குறித்து காளீஸ்வரனிடம் தட்டிக் கேட்டேன்.

என்னை எதுவும் கேட்க கூடாது என்றும் நாம் உல்லாசமாக இருந்த போது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளேன். ஏதாவது மிரட்டினால் இணைய தளத்தில் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என்று படத்தை காண்பித்து என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி வழக்குப் பதிவு செய்து காளீஸ்வரனைக் கைது செய்து பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். காளீஸ்வரன் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+