7 தமிழர் விடுதலையில் இன்று முக்கிய முடிவு.. உறுதிப்படுத்திய சட்டத்துறை அமைச்சர்
சென்னை: இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 வருடங்களுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் உள்ளனர். சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

புதிய கடிதம்
அந்த வழக்கில் சில தினங்கள் முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. மாநில அரசு தனக்கு உள்ள சட்ட அதிகாரத்தின்படி, 7 தமிழர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து வேலூர் சிறையில் உள்ள ஏழு பேரும் நேற்று முன்தினம் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று புதிதாக ஒரு கோரிக்கை மனுவை எழுதி அதை தங்களது வழக்கறிஞர் புகழேந்தி மூலமாக அரசுக்கு கொடுத்தனுப்பினார். அந்த கடிதம் நேற்று அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினத்தில் விடுதலை முடிவு
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று, விடுமுறை தினம் என்ற போதிலும், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை இன்று, கூடுகிறது.

என்ன காரணம்
அமைச்சரவையின் அஜெண்டா என்ன என்பது குறித்து தெரியாவிட்டாலும், 7 தமிழர் விடுதலைதான் இதன் நோக்கம் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் இதை உறுதி செய்தார்.

உறுதி செய்த அமைச்சர்
இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். இதன்மூலம் என்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications