சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு ஜெ. இரங்கல்: தூதரக புத்தகத்தில் பதிவு
சென்னை: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு இரங்கலை தூதரக புத்தகத்தில் பதிவு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இரண்டு முறை அதிபராக இருந்த எஸ்.ஆர். நாதன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 31-7-2016 அன்று சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் எஸ்.ஆர்.நாதன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 22-8-2016 அன்றிரவு காலமானார். எஸ்.ஆர்.நாதனின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் நாட்டின் தேசிய கொடியால் மூடப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.நாதனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான தலைவர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் அதிபருக்கான இறுதி மரியாதை சடங்குகள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெறும். இறுதி மரியாதையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்பட பலர் அஞ்சலி உரையாற்றுகிறார்கள். மாலை சுமார் 5 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதனிடையே எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு இரங்கலை தூதரக புத்தகத்தில் பதிவு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
22.08.2016 அன்று இயற்கை எய்திய சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கும் வகையில், சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் கீழ்க்கண்ட இரங்கல் செய்தியை பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 22.8.16 அன்று சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு ஆழ்ந்த வேதனையும், இரங்கலும் தெரிவிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இதயம் தோய்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
அதன்படி தமிழக அரசின் சார்பில் மேற்கண்ட இரங்கல் செய்தி, இரங்கல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications