ருத்ரதாண்டவமாடும் வர்தா புயல்.. வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்
வர்தா புயல் இன்னும் சிறிது நேரத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வர்தா புயல் உக்கிரத்தை காட்டி வருவதால் பொதுமக்கள் தற்போது வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வர்தா புயலின் மையப்பகுதியானது இன்னும் 1 மணிநேரத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சென்னையை தாக்கி கடக்க உள்ளது. வர்தா புயலின் பிற பகுதிகள் சென்னையை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இதனால் சென்னை நகரில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பேய்க்காற்று வீசுகிறது. சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வீழ்ந்துவிட்டன. மின்கம்பங்கள் பலவும் சாய்ந்துவிட்டன.

இதனிடையே தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் பொதுமக்கள் பகல் 1 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்; வெளியே இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications