ரூ.216 கோடி விவகாரம்: சசி கோஷ்டியை தீவிரமாக ஆதரிக்கும் அதிமுக்கிய தலைவர் சிக்குகிறார்?
சசிகலா கோஷ்டியை விழுந்து விழுந்து ஆதரிக்கும் தமிழக முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் ஒருவரும் சிக்குகிறார்.
சென்னை: சசிகலா கோஷ்டியை விழுந்து விழுந்து ஆதரித்து பேசி வரும் அந்த அதிமுக்கிய தலைவரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே சசிகலா குடும்பத்தை ரொம்பவே ஆதரித்து வந்தார் அந்த அதிமுக்கிய தலைவர். இதற்காக சசிகலா கணவர் நடராஜன் ரூ216 கோடி பணம் அந்த தலைவருக்கு கொடுத்ததாக கூறப்பட்டது.

சசி குடும்பத்துக்கு முட்டு
ஆனால் மத்திய பாஜக அரசு, மாநில உரிமைகள் என்ற முற்போக்கு போர்வையில்தான் அந்த தலைவரும் சசிகலா குடும்பத்துக்கு முட்டு கொடுத்து வந்தார். அதேபோல் மேலும் பல தலைவர்களும் சசிகலா குடும்பத்தை படுதீவிரமாக ஆதரித்தனர்.

தினகரனுக்கு ஆதரவு
சசிகலா சிறைக்கு சென்ற நிலையில் தினகரனையும் தீவிரமாக ஆதரித்து பேசிவந்தார் அந்த தலைவர். அதேபோல் தனியே ஒரு கட்சி நடத்திய நிலையிலும் கூட அதிமுக மீது ரொம்பவே கரிசனம் காட்டி வந்தார் அந்த தலைவர்.

ஐடி ரெய்டு
இதனிடையே தினகரனும் சிறைக்கு போய்விட்ட நிலையில் தொடர்ந்து அதிமுகவை ஆதரித்துதான் வந்தார் அந்த தலைவர். தற்போது அந்த அதிமுக்கிய தலைவருக்கு நெருக்கமான இடங்களில் வருமானவரித்துறை புகுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிக்கியதுதான்...
ஆனால் அந்த அதிமுக்கிய தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்களோ இத்தகவலை மறுத்து வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசின் வளையத்தில் அந்த தலைவர் சிக்கியிருப்பாது உறுதியாகிவிட்டது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications