"புயலுக்கு விஜயகாந்த்னு மட்டும் பேர் வச்சிடாதீங்க அப்புறம் தூக்கி அடிச்சிரும்"
சென்னை: புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் என வாட்ஸ்ஆப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தெருக்களில் வெள்ளநீர் ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்பில் கனமழை பற்றி மக்கள் தங்களின் கருத்துகளை சீரியஸாகவும், காமெடியாகவும் தெரிவித்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ஆனால் நாங்கள் மட்டும் வெள்ளத்திலும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளதே என தங்களின் வருத்தத்தையும் பலர் தெரிவித்துள்ளனர்.
புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் என்ற செய்தி வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த செய்தியை பார்த்த அருண் என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் - வாட்ஸ்ஆப் #விஜயகாந்த்னு மட்டும் பேர் வச்சிடாதீங்க அப்புறம் தூக்கி அடிச்சிரும்.
— Arun Journalist (@arunjournal) November 15, 2015 புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் - வாட்ஸ்ஆப் #விஜயகாந்த்னு மட்டும் பேர் வச்சிடாதீங்க அப்புறம் தூக்கி அடிச்சிரும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications