மெரினா நினைவிட விவகாரம்: நீதிபதிகளை கோபப்படுத்திய டிராபிக் ராமசாமி.. ஹைகோர்ட்டில் பரபரப்பு
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

டிராபிக் ராமசாமி
அப்போது மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். டிராபிக் ராமசாமியும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்.

குழப்பிய டிராபிக் ராமசாமி
பின்னர் கருணாநிதி தொடர்பான வழக்கில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கை முடித்து வைக்கக்கூடாது என அவர் கூறினார்.

நீதிபதிகள் கோபம்
முன்னர் வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு பின்னர் தனது நிலைப்பாட்டை டிராபிக் ராமசாமி தரப்பு மாற்றிக்கொண்டதால் நீதிபதிகள் கோபம் அடைந்தனர்.

எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்
மேலும் மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் டிராபிக் ராமசாமி கூறினார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக டிராபிக் ராமசாமி தரப்பு கூறியது.

வழக்குகள் தள்ளுபடி
இதைத்தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications