மெரினா நினைவிட விவகாரம்: நீதிபதிகளை கோபப்படுத்திய டிராபிக் ராமசாமி.. ஹைகோர்ட்டில் பரபரப்பு
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

டிராபிக் ராமசாமி
அப்போது மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். டிராபிக் ராமசாமியும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்.

குழப்பிய டிராபிக் ராமசாமி
பின்னர் கருணாநிதி தொடர்பான வழக்கில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கை முடித்து வைக்கக்கூடாது என அவர் கூறினார்.

நீதிபதிகள் கோபம்
முன்னர் வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு பின்னர் தனது நிலைப்பாட்டை டிராபிக் ராமசாமி தரப்பு மாற்றிக்கொண்டதால் நீதிபதிகள் கோபம் அடைந்தனர்.

எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்
மேலும் மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் டிராபிக் ராமசாமி கூறினார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக டிராபிக் ராமசாமி தரப்பு கூறியது.

வழக்குகள் தள்ளுபடி
இதைத்தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications